11/26/2011

வீரம் நிலை நாட்டிய எம் தாயக நல்நாட்டினில்
பட்டொளிரும் சூரியனாய் மீண்டும் இவன் தோன்றுவான்
ஈகம் நிறை சாற்றிய எம் வீரர்கள் கூட்டினில்
சுட்டெரிக்கும் வீரியனாய் இவனே பாதை காட்டுவான்


57 அகவையிலும்  குன்றாத இலட்சியங்கள் தாங்கும் இவன்
87 ஆகையிலும் மங்காத இலட்சணங்கள் பொங்கும்  மகன்
அதர்மத்தை அடியறுக்க பெரும் தர்மத்தை நிலை நிறுத்த
பகைவர்கள் தலையறுத்து எம் கயவர்கள் கதை முடிப்பான்

இனி மேவும் கொடும் சுடும் நெருப்பாற்றின் வழிதன்னில்
தனி ஆகும் நாம் தேடும் பாடும் எம் தாய் நிலம்
தாயகம் காத்திட தாகங்கள் தீர்த்திட மௌனங்கள் களைந்து
மன்னவன் வரும் நாளில் நிச்சயம் மலரும்  தமிழீழம்


-  தேசியன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக